கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-28

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2050 நளி (கார்த்திகை) ௧௫ ஞாயிறு (01-12-2019) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: சேர்ந்திசைத்தல்
வரவேற்புரை: கவிச்சுடர் கா.உமாபதி (பொருளாளர் - தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.

அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தலைமையுரை: தமிழ்த்திரு சுடர் முருகையன் (காவல்துறை அதிகாரி நிறுவனர் படைப்பாளர் குழு சென்னை - ப.நி) அவர்கள்


முன்னிலை: பாடலாசிரியர் கவிஞர் தேன்மொழியன் பி.ஏ.,பி.எல்ஐபி.,ஐஎசுசி அவர்கள்
(நிறுவனர் கிவ் வே பௌண்டேசன் பெங்களூரு)


சிறப்புரை: முனைவர் மு. புவனேசுவரி அவர்கள்.
(உதவிப்பேராசிரியர் , தமிழ்த்துறை , அரசுக்கலைக் கல்லூரி கோவை)
தலைப்பு: தொல்காப்பியம்-- அறத்தொடு நிற்றல்.


தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: களவியல்


இலக்கியப்புதிர்,செப்பிடுவித்தை: கலைமாமணி தமிழ்ச்செம்மல் மு.பெ. இராமலிங்கம் அவர்கள்.

பாராட்டு: நல்லாசிரியர் விருதுபெற்றோர், தமிழில் பெயர்ப்பலகை, வாகனங்களில் தமிழ் எண்கள் எழுதியோர், குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டிய தமிழப்பற்றாளர்கள்.

வந்தோர்க்கு வாய்ப்பு: அனைவரும் பங்கு பெறலாம் (பொழிவு ,கவிதை,பாடல்)

இணைப்புரை: கா.இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) அவர்கள்.
நன்றியுரை: மதிப்புறு முனைவர்.நித்தியானந்தபாரதி (நிறுவனத்தலைவர்,கணபதித்தமிழ்ச்சங்கம்) அவர்கள்.