கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-29

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2050 சிலை (மார்கழி) உ0 ஞாயிறு (05-01-2020) காலை 10:00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: சேர்ந்திசைத்தல்
வரவேற்புரை: கவிச்சுடர் கா.உமாபதி (பொருளாளர் - தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.

அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தலைமையுரை: வழக்கறிஞர் சு. இரவீந்திரன் (கம்பன்கலைக்கூடம் சௌரிபாளையம்) அவர்கள்


முன்னிலை: பேரறிவாளன் கா.ப.கலையரசன் எம்.ஏ.,எம்.யெட், அவர்கள்
(தலைவர் துடியலூர் தமிழ்ச்சங்கம்,செயலாளர் கோயம்புத்தூர் தமிழிச்சங்கமம்)

சிறப்புரை: முனைவர் மு.பழனிசாமி அவர்கள். (தலைமையாசிரியர் பணிநிறைவு)
தலைப்பு: தொல்காப்பியத்தில் -- நிலப்பாகுபாடு

சிறப்புரை-2: முனைவர் மு. ப. தீனதயானன் (கனடா) அவர்கள்.


தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: களவியல் தொடர்ச்சி


இலக்கியப்புதிர்,செப்பிடுவித்தை: கலைமாமணி தமிழ்ச்செம்மல் மு.பெ. இராமலிங்கம் அவர்கள்.

பாராட்டு: நல்லாசிரியர் விருதுபெற்றோர், தமிழில் பெயர்ப்பலகை, வாகனங்களில் தமிழ் எண்கள் எழுதியோர், குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டிய தமிழப்பற்றாளர்கள்.

வந்தோர்க்கு வாய்ப்பு: அனைவரும் பங்கு பெறலாம் (பொழிவு ,கவிதை,பாடல்)

இணைப்புரை: கா.இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) அவர்கள்.
நன்றியுரை: மதிப்புறு முனைவர்.நித்தியானந்தபாரதி (நிறுவனத்தலைவர்,கணபதித்தமிழ்ச்சங்கம்) அவர்கள்.