கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-32

கொரொனோ தீநுண்மியின் தாக்கத்தால் இணையவழி வழியாக 32-ம் அமர்வில் பங்கேற்று, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலிவடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இங்கு ஏற்றப்பட்டுள்ளது. எவ்வகைத் தாக்கம் நேரினும் தொல்காப்பியப் பணி எள்ளளவும் குறையாது என்பதை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் இந்த அமர்வை செவ்வனே நடத்திய கோவை தொல்காப்பியர் பேரவையினருக்கு உலகத்தொல்காப்பிய மன்றத்தின் மனமார்ந்த பாராட்டுகள்!.



நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2051 மீனம் (பங்குனி) ௨௩ ஞாயிறு (05-04-2020) காலை 10:00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிச்சுடர் கா. உமாபதி (பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.

அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தலைமையுரை: தமிழ்த்திரு கோ.கா.ஆனந்த்குமார் எம்.ஏ., பி.எட்.,எம்.ஃபில் அவர்கள்.
(தலைமையாசிரியர், மாவட்ட ஆணையாளர், பாரத சாரண சாரணிய இயக்கம்தமிழ்நாடு)
முன்னிலை: பொறியாளர் கா. முத்துசாமி ஐயா அவர்கள்.
(மேற்பார்வைப் பொறியாளர் பொதுப்பணித்துறை, பணிநிறைவு)
சிறப்புரை: முனைவர் ப.சு. ஞானப்பூங்கோதை அவர்கள்.
(இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, த.சா.அ. தமிழ்க்கல்லூரி,பணிநிறைவு)
தலைப்பு: தொல்காப்பியத்தில் - சித்தாந்த மரபுகள்

தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்
(தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
தலைப்பு: கூற்று நிகழும் முறைகள்
செப்பிடுவித்தை&இலக்கியப்புதிர்: கலைமாமணி தமிழ்ச்செம்மல் மு.பெ.இராமலிங்கம் அவர்கள்
இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) அவர்கள்.
நன்றியுரை: மதிப்புறு முனைவர் நித்தியானந்தபாரதி (நிறுவனத்தலைவர் கணபதித்தமிழ்ச்சங்கம் ,தமிழக அரசு திருவள்ளுவர் விருதாளர்) அவர்கள்.