உலகத்தொல்காப்பிய மன்றம்

சிறப்புப்பாயிரம்

வட வேங்கடம் தென் குமரி 
ஆயிடைத் 
தமிழ் கூறும் நல்லுகத்து 
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் 
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு 
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் 
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் 
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து 
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய

10 

அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து 
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி 
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த 
தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப் 
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

15 

- பனம்பாரனார் இயற்றியது


சிறப்புப்பாயிரம் ஓலைச்சுவடி வடிவம்

சிறப்புப்பாயிரம்  ஓலைச்சுவடி

காணொளி

நிகழ்வுகள்